என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஸ்வப்னா சுரேஷ்"
- ஸ்வப்னாவின் வாக்குமூல விபரங்கள் ஒவ்வொன்றாக வெளியாகி கேரள அரசியலில் பரபரப்பை கிளப்பி வருகிறது.
- ஸ்வப்னாவை தனக்கு தெரியாது என்றும், இது எதிர்கட்சிகளின் திட்டமிட்ட சதி எனவும் பினராயி விஜயன் கூறினார்.
கொச்சி:
கேரளாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தங்க கடத்தல் வழக்கில் தூதரக முன்னாள் பெண் அதிகாரி ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டார். அதன்பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட ஸ்வப்னா கோர்ட்டில் ரகசிய வாக்குமூலம் அளித்தார். அதில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இந்த வழக்கில் நேரடி தொடர்பு இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
கொச்சி கோர்ட்டில் அவர் அளித்த வாக்குமூலத்தில் முதல் மந்திரி பினராயி விஜயனுக்கு தொடர்பு இருப்பதாக கூறி பரபரப்பை கிளப்பினார். மேலும் இது தொடர்பாக திருவனந்தபுரத்தில் உள்ள அரசு வீட்டில் பினராயி விஜயனை சந்தித்ததாகவும் கூறினார்.
இதையடுத்து முதலமைச்சர் பதவியில் இருந்து பினராயி விஜயன் விலகக் கோரி அம்மாநில எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின.
இந்நிலையில், கொச்சியில் உள்ள அலுவலகத்தில் ஜூன் 22ம் தேதி ஸ்வப்னா சுரேஷ் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
- பினராயி விஜயன், அவரது மகளின் ஐ.டி.நிறுவனத்தை அரபு நாட்டிலும் விரிவுபடுத்த விரும்பினார். இதற்காக ஷார்ஜாவின் சுல்தான் கேரளா வந்த போது அவரை பினராயி விஜயன் சந்தித்தார்.
- ஸ்வப்னாவின் வாக்குமூல விபரங்கள் ஒவ்வொன்றாக வெளியாகி கேரள அரசியலில் பரபரப்பை கிளப்பி வருகிறது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் நடந்த தங்க கடத்தல் விவகாரம் குறித்து ஸ்வப்னா கோர்ட்டில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
கொச்சி கோர்ட்டில் அவர் அளித்த வாக்குமூலத்தில் முதல் மந்திரி பினராயி விஜயனுக்கு தொடர்பு இருப்பதாக கூறி பரபரப்பை கிளப்பினார்.
மேலும் இது தொடர்பாக திருவனந்தபுரத்தில் உள்ள அரசு வீட்டில் பினராயி விஜயனை சந்தித்ததாகவும் கூறினார்.
இதனை முதல் மந்திரி பினராயி விஜயன் மறுத்தார்.இந்த நிலையில் பினராயி விஜயன், அவரது மகளின் ஐ.டி.நிறுவனத்தை அரபு நாட்டிலும் விரிவுபடுத்த விரும்பினார். இதற்காக ஷார்ஜாவின் சுல்தான் கேரளா வந்த போது அவரை பினராயி விஜயன் சந்தித்தார்.
இத்திட்டத்திற்கு ஷார்ஜா அரசு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் இத்திட்டம் நிறைவேறவில்லை என ஸ்வப்னா வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
ஸ்வப்னாவின் வாக்குமூல விபரங்கள் ஒவ்வொன்றாக வெளியாகி கேரள அரசியலில் பரபரப்பை கிளப்பி வருகிறது.
இதையடுத்து பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்ற காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சியி னரின் போராட்டமும் தீவிரம் அடைந்துள்ளது.
- தங்க கடத்தல் விவகாரத்தில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக ஸ்வப்னா தெரிவித்தார்.
- ஸ்வப்னாவை தனக்கு தெரியாது என்றும், இது எதிர்கட்சிகளின் திட்டமிட்ட சதி எனவும் பினராயி விஜயன் கூறினார்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் நடந்த தங்க கடத்தல் விவகாரத்தில் கைதான ஸ்வப்னா தற்போது ஜாமீனில் விடுதலை ஆகியுள்ளார்.
தற்போது வெளியில் இருக்கும் ஸ்வப்னா, தங்க கடத்தல் விவகாரத்தில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து பினராயி விஜயன் பதவி விலக கோரி மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது.
இதுபற்றி பினராயி விஜயன் கூறும்போது, ஸ்வப்னாவை தனக்கு தெரியாது என்றும், இது எதிர்கட்சிகளின் திட்டமிட்ட சதி எனவும் கூறினார்.
பினராயி விஜயன் தன்னை தெரியாது என்று கூறியது பற்றி நிருபர்கள் ஸ்வப்னாவிடம் கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:-
கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் என்னை தெரியாது என்று கூறியுள்ளார். நான் அவரை திருவனந்தபுரத்தில் உள்ள அரசு அலுவலக வீட்டில் பலமுறை சந்தித்து உள்ளேன்.
அவரை மட்டுமல்ல அவரது குடும்பத்தினரையும் சந்தித்து பேசியுள்ளேன். தேவைப்படும் போது அதனை ஆதாரத்துடன் தெரிவிப்பேன், என்றார். ஸ்வப்னாவின் இந்த பேட்டி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பினராய் விஜயன் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ், பா.ஜனதா மற்றும் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
- முதல்-மந்திரி பினராய் விஜயன் கண்ணூரில் உள்ள அவரது இல்லத்தில் இரவைக் கழிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் தங்க கடத்தல் வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே உள்ள ஸ்வப்னா சுரேஷ், கடத்தல் வழக்கில் கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாக பரபரப்பு புகார் கூறினார். இதனை கோர்ட்டில் ரகசிய வாக்குமூலத்திலும் தெரிவித்து உள்ளதாக அவர் கூறினார்.
ஸ்வப்னாவின் இந்த குற்றச்சாட்டு கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல்-மந்திரி பினராய் விஜயன் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ், பா.ஜனதா மற்றும் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அவர்கள் பினராய் விஜயனுக்கு எதிராக கருப்புக் கொடி ஏந்தி கோஷமிட்டு வருகின்றனர். நேற்று பினராய் விஜயன் பங்கேற்ற பல்வேறு நிகழ்ச்சிகளிலும் எதிர்க்கட்சியினர் திரண்டதால் பதட்டம் காணப்பட்டது.
வடகரையில் பினராய் விஜயன் கான்வாய் முன்பு கறுப்புக்கொடி காட்டியதாக 4 காங்கிரஸ் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
போராட்டம் தீவிரம் அடைந்ததால் போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். குறிப்பாக முதல்-மந்திரி பினராய் விஜயன் கண்ணூரில் உள்ள அவரது இல்லத்தில் இரவைக் கழிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அவர் விருந்தினர் மாளிகைக்கு அழைத்துச் சென்று தங்க வைக்கப்பட்டார்.
- கேரள முதல் மந்திரி பினராயி விஜயனை பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
- என்னுடன் இருப்பவர்களைக் குறிவைத்து காவல்துறை நடவடிக்கை எடுக்கிறது என ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்தார்.
பாலக்காடு:
கேரளாவை உலுக்கிய தங்கக் கடத்தல் வழக்கில் முதல் மந்திரி பினராயி விஜயன், அவரது குடும்பத்தினர் மற்றும் முக்கிய பிரமுர்களுக்கு தொடர்பு உள்ளதாக ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்தார். இதையடுத்து, முதல் மந்திரி பினராயி விஜயனை பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதற்கிடையே, தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் தரப்பில் வக்கீல் ஆர்.கிருஷ்ணராஜ் ஆஜராகி வாதாடி வருகிறார். இவர் கேரள அரசு போக்குவரத்து கழக பஸ் டிரைவர் ஒருவரை விமர்சித்து முகநூலில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதுதொடர்பாக வக்கீல் கிருஷ்ணராஜ் மீது ஜாமீனில் வெளியே வரமுடியாத வகையில் கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், பாலக்காட்டில் உள்ள தனது வீட்டில் வைத்து ஸ்வப்னா சுரேஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
முதல் மந்திரி பினராயி விஜயன், அவரது குடும்பத்தினர் உள்பட அனைவரின் மீதும் நான் ரகசிய வாக்குமூலத்தில் அளித்துள்ள புகார்களில் இருந்து எந்தக் காரணம் கொண்டும் பின்வாங்கப் போவதில்லை.
என்னுடன் இருப்பவர்களைக் குறிவைத்து காவல்துறை நடவடிக்கை எடுக்கிறது. சரித்குமாரை போலீஸ் பிடித்துச் சென்று ஒரு மணி நேரத்தில் விடுவிப்பார்கள் என்று ஷாஜ் கிரண் கூறினார். அதேபோல நடந்தது. என்னுடைய வக்கீல் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்யும் என்றார். அதுவும் நடந்துள்ளது.
என்னைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. என்னைக் கொன்று விடுங்கள். அப்படி நடந்தால் அனைத்து உண்மைகளும் மூடப்பட்டு விடும் என தெரிவித்தார்.
- ஸ்வப்னா வெளியிட்ட ஆடியோ பதிவுக்கு ஷாஜி கிரன் உடனடியாக மறுப்பு தெரிவித்தார்.
- பெண் ஒருவர் தனக்கு ஏற்படும் பிரச்சினையை எதிர்த்து போரிட்டால், அவரது தனிப்பட்ட விசயத்தை வெளியில் கூறி மிரட்டுவது வாடிக்கை.
திருவனந்தபுரம்:
கேரளாவில் நடந்த தங்க கடத்தல் விவகாரத்தில் முதல் மந்திரி பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு இருந்ததாக இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா கோர்ட்டில் வாக்குமூலம் அளித்தார்.
இதையடுத்து தனக்கு மிரட்டல் வருவதாக ஸ்வப்னா புகார் கூறினார். மேலும் வாக்குமூலத்தை வாபஸ் பெற வேண்டும் என ஷாஜி கிரன் என்பவர் மிரட்டுவதாகவும் கூறியிருந்தார்.
ஷாஜி கிரன், முதல் மந்திரி பினராயி விஜயனுக்கு நெருக்கமானவர் என தெரிவித்த ஸ்வப்னா, தன்னுடன் ஷாஜி கிரன், டெலிபோனில் பேசி மிரட்டிய ஆடியோ இருப்பதாக கூறியிருந்தார்.
இந்த ஆடியோவை நேற்று மாலை ஸ்வப்னா வெளியிட்டார். அதில் ஸ்வப்னாவிடம் பேசும் நபர், தங்க கடத்தல் விவகாரத்தில் முதல் மந்திரியின் குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாக கூறியதை சகித்து கொள்ள முடியாது.
இந்த பிரச்சினைக்கு உடனே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதற்காக கோர்ட்டில் அளித்த வாக்குமூலத்தை திரும்ப பெற வேண்டும் எனக்கூறியிருந்தார். இதுபோல மேலும் பல தகவல்கள் ஆடியோவில் கூறப்பட்டிருந்தது. ஸ்வப்னா வெளியிட்ட ஆடியோ பதிவுக்கு ஷாஜி கிரன் உடனடியாக மறுப்பு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறும்போது, ஆடியோ பதிவில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. இதில் ஸ்பவ்னா பேசும் பல தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளன, என்றார்.
இதற்கும் ஸ்பவ்னா பதில் அளித்தார். அவர் கூறும்போது, ஆடியோ பதிவை வெளியிட்டதால் என்னை பற்றிய ஆபாச வீடியோவை வெளியிட போவதாக மிரட்டுகிறார்கள். ஆபாச வீடியோ பற்றி எனக்கு எதுவும் தெரியாது. என் வீட்டின் படுக்கை அறையில் அல்லது குளியல் அறையில் ரகசிய கேமராவை பதுக்கி வைத்து எடுத்தார்களா? என தெரியவில்லை.
பெண் ஒருவர் தனக்கு ஏற்படும் பிரச்சினையை எதிர்த்து போரிட்டால், அவரது தனிப்பட்ட விசயத்தை வெளியில் கூறி மிரட்டுவது வாடிக்கை. அந்த வகையில் எனக்கும் இதுபோன்ற மிரட்டல் வந்துள்ளது. என்னை பற்றிய ஆபாச வீடியோக்களை வெளியிட்டால், அதனை அனைவரும் பார்த்து அதில் உண்மை இருக்கிறதா? என்பதை கண்டுபிடிக்க வேண்டும். 100 சதவீதம் உண்மைதானா? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் இந்த பிரச்சினையை நான் சும்மா விடப்போவதில்லை. இதுபற்றியும் வழக்கு தொடர்ந்து சட்டபூர்வமாக சந்திப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே பினராயி விஜயன் பதவி விலக கோரி காங்கிரசார் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
பல இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கைகலப்பும் மூண்டது. கல்வீச்சும் நடந்தது. இதனால் பதட்டம் ஏற்பட்டது. 4-வது நாளாக இன்றும் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தது.
- ஸ்வப்னா சுரேஷ் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி உள்ளதால், அவருக்கு பலத்த பாதுகாப்பு அளிக்க உத்தரவு பிறப்பித்தது.
- ஸ்வப்னா சுரேஷ் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு, அவர் பணியாற்றும் நிறுவனத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தி வந்ததில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் எர்ணாகுளம் மாவட்ட நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்தார். அதில் தங்கம் கடத்தலில் முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாக கூறினார். அதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் காங்கிரஸ், பா.ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
இந்தநிலையில் கூட்டு சதித்திட்டம் தீட்டியது மற்றும் கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டதாக ஸ்வப்னா சுரேஷ் மீது முன்னாள் மந்திரி ஜலீல் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்கக்கோரி கேரள ஐகோர்ட்டில் ஸ்வப்னா சுரேஷ் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை கேரள ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. அதே நேரத்தில் ஸ்வப்னா சுரேஷ் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி உள்ளதால், அவருக்கு பலத்த பாதுகாப்பு அளிக்க உத்தரவு பிறப்பித்தது.
அதை தொடர்ந்து, பாலக்காட்டில் ஸ்வப்னா சுரேஷ் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் அவர் பணியாற்றும் நிறுவனத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் வீட்டை சுற்றி கண்காணிப்பு கேமரா அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக கூறிய குற்றச்சாட்டை வாபஸ் பெறுமாறு ஷாஜி கிரண் மிரட்டியதாக ஸ்வப்னா சுரேஷ் கூறியிருந்தார். ஷாஜி கிரண் முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் கோடியேரி பாலகிருஷ்ணனுக்கு நெருக்கமானவர் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில், இருவரும் பேசிய உரையாடல்களை ஸ்வப்னா சுரேஷ் நேற்று வெளியிட்டார். அதை மறுத்த ஷாஜி கிரண் உரையாடல்களில் மாறுதல் செய்து வெளியிடப்பட்டு உள்ளதாக கூறி உள்ளார்.
அதே சமயம் ஸ்வப்னா சுரேஷின் ஆபாச வீடியோக்களை வெளியிடப் போவதாக ஷாஜி கிரண் கூறியதாக வெளியான தகவலால் கேரளாவில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
- முதல் மந்திரி பினராயி விஜயன் பதவி விலக கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர்.
- ஸ்வப்னாவின் புதிய குற்றச்சாட்டு கேரளாவில் மீண்டும் பரபரப்பை கிளப்பி உள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தங்க கடத்தல் வழக்கில் ஐக்கிய அரபு அமீரக தூதரக முன்னாள் பெண் அதிகாரி ஸ்வப்னா கைது செய்யப்பட்டார்.
பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட ஸ்வப்னா கடந்த சில நாட்களுக்கு முன்பு கோர்ட்டில் ரகசிய வாக்குமூலம் அளித்தார். அதில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இந்த வழக்கில் நேரடி தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டினார்.
ஸ்வப்னாவின் குற்றச்சாட்டை தொடர்ந்து கேரள அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முதல் மந்திரி பினராயி விஜயன் பதவி விலக கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர்.
இதற்கிடையே ஸ்வப்னா மீது கேரள முன்னாள் மந்திரி ஜலீல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த கோர்ட்டு, ஸ்வப்னா மீது ஜாமீனில் வரத்தக்க வழக்கே பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறி முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.
மனு தள்ளுபடியானதும், ஸ்வப்னா, இன்னொரு பரபரப்பு தகவலை வெளியிட்டார். அதில் முதல் மந்திரி பினராயி விஜயனுக்கு நெருக்கமான ஷாஜ் கிரண் என்பவர் தன்னை சந்தித்து பேசியதாகவும், அப்போது கோர்ட்டில் அளித்த ரகசிய வாக்குமூலத்தை வாபஸ் பெறும்படி வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.
வாக்குமூலத்தை வாபஸ் பெற்றால் தன்மீதான வழக்குகள் அனைத்தையும் இல்லாமல் செய்துவிட ஏற்பாடு செய்வதாகவும் கூறினார்.
இது தொடர்பான ஆடியோ பதிவு தன்னிடம் இருப்பதாகவும், அதனை இன்று வெளியிடுவேன் எனவும் கூறியுள்ளார். ஸ்வப்னாவின் இந்த புதிய குற்றச்சாட்டு கேரளாவில் மீண்டும் பரபரப்பை கிளப்பி உள்ளது.
- தங்கம் கடத்தல் வழக்கில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாக ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்தார்.
- தன் மீதான குற்றச்சாட்டை முன்னாள் மந்திரி கே.டி. ஜலீல் மறுத்துள்ளார்.
திருவனந்தபுரம்:
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள அதன் தூதரகத்துக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த பார்சலில் தங்கம் கடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி தூதரக முன்னாள் அதிகாரி ஸ்வப்னா சுரேஷ் உள்பட 20-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். தங்கம் கடத்தல் விவகாரத்தில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் அலுவலக ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கருக்கும் தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது.
அதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அவர் பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை கொச்சி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதன் விசாரணைக்கு கடந்த 2 நாட்களாக கோர்ட்டில் ஸ்வப்னா சுரேஷ் ஆஜரானார்.
அப்போது நிருபர்களிடம் பேசிய அவர், தங்கம் கடத்தல் வழக்கில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் முன்னாள் மந்திரி கே.டி. ஜலீல் மீதும், ஸ்வப்னா சுரேஷ் குற்றம் சுமத்தினார். வெளிநாடுகளில் இருந்து கரன்சி கடத்தப்படுவது அவருக்கு தெரியும் என ஸ்வப்னா சுரேஷ் கூறினார்.
இந்தநிலையில் அவரது குற்றச்சாட்டை முன்னாள் மந்திரி கே.டி. ஜலீல் மறுத்துள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும், பா.ஜ.க. மற்றும் யு.டி.எப். சதி என்றும் அவர் கூறினார். மேலும் தற்போதைய அரசின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க சதி நடக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த சதி குறித்து போலீசார் விசாரிக்க வேண்டும் என்று கூறிய அவர், இது தொடர்பாக திருவனந்தபுரம் கண்டோன்மென்ட் போலீசில் புகாரும் அளித்துள்ளார். சிலரின் தூண்டுதலின் பேரிலேயே இதுபோன்ற பொய்யான செய்திகளை ஸ்வப்னா சுரேஷ் பரப்பி வருகிறார்.
அரசியல் நோக்கத்துடன் அவதூறு செய்திகளை பரப்பி வரும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.
இது தொடர்பாக துணை இயக்குனரின் சட்ட ஆலோசனையின் பேரில் கன்டோன்மென்ட் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ஸ்வப்னா சுரேஷ் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153 மற்றும் 120 (பி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
புகாரை விசாரிக்க ஏ.டி.ஜி.பி. தலைமையில் போலீஸ் குழு அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கடந்த 2016-ம் ஆண்டு துபாயில் வைத்து பினராயி விஜயனுக்கு பணம் கொடுக்கப்பட்டது என ஸ்வப்னா சுரேஷ் கூறினார்.
- ஸ்வப்னா சுரேஷின் இந்த வாக்குமூலம் அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம்:
திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகம் பெயரில் வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்திய வழக்கில் தூதரக முன்னாள் ஊழியர்கள் ஸ்வப்னா சுரேஷ், சரித் உள்பட பலர் சிக்கினர். இந்த வழக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
ஸ்வப்னா சுரேஷ் பெங்களூருவில் என்.ஐ.ஏ. அதிகாரிகளால் கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் மீது என்.ஐ.ஏ. போலீசார் உபா சட்டத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில் கேரள முதல் மந்திரி பினராய் விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர், சரித்குமார், ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
ஸ்வப்னா சுரேஷ் கேரள முதல்-மந்திரியின் கட்டுப்பாட்டில் இருந்த தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வந்தவர் ஆவார். இந்தக் கடத்தலில் முதல்-மந்திரி பினராயி விஜயன், முன்னாள் மந்திரி கே.டி.ஜலீல் உள்ளிட்டோருக்கும் பங்கு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இதற்கிடையே, இந்த வழக்கில் ஜாமீனில் இருக்கும் ஸ்வப்னா சுரேஷ், தான் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளிக்க விரும்புவதாகக் கூறினார். தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், எனவே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பான அனைத்து உண்மைகளையும் வெளியிடப் போவதாகவும் கூறினார்.
இந்நிலையில், ஸ்வப்னா சுரேஷ் இன்று நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார். இந்த வழக்கில் முதல் மந்திரி பினராயி விஜயன், அவரது மனைவி கமலா, அவரது மகள், பினராயி விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர் உள்ளிட்டோருக்குத் தொடர்பு உள்ளது என தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்